நெவில் பெர்னான்டோ மருத்துவமனை அரசாங்கத்திடம் கையளிக்கப்படவுள்ளது

317 0

நெவில் பெர்னான்டோ போதனா மருத்துவமனை அரசாங்கத்திடம் கையளிக்கப்படவுள்ளதாக அதன் உரிமையாளரான மருத்துவர் நெவில் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

தனது முகப்புத்தக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் திங்கட்கிழமை தாம் அந்த மருத்துவமனையை அரசாங்கத்திடம் கையளிக்கவுள்ளதாக அவரது முகப்புத்தக வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரியுடன் இணைத்து செயற்படுத்துவதற்காக குறித்த மருத்துவமனை தமது சொந்த நிதியில் நிர்மானித்ததாக தெரிவத்துள்ள அவர், குறித்த மருத்துவமனையில் பொதுமக்களின் பாவனைக்க்காக வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெவில் பெர்னான்டோ மருத்துவமனை இலங்கையில் உருவாக்கப்பட்ட மிகப் பெரிய தனியார் நிறுவனமாகும்.

கடந்த 2013 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த மருத்துவமனை 3 ஆயிரத்து 550 மில்லியன் ரூபாய் பொருட் செலவில் உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment