கைது செய்யப்பட்ட கடற்படையின் முன்னாள் ஊடகப் பேச்சாளருக்கு விளக்கமறியல்

296 0

கைது செய்யப்பட்ட கடற்படையின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் டி கே பி தஸநாயக்கவை எதிர்வரும் 19ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன இன்று இந்த உத்தரவை பிறப்பித்தார்.

அவர், நோயாளர் காவு வண்டியில் வெலிசர கடற்படை மருத்துவமனையில் இருந்து நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டு கொழும்பு பிரதான நீதிவான் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இந்தநிலையிலேயே அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

அத்துடன் அவரது உடல் நலம் தொடர்பில் கொழும்பு தேசிய மருத்துவமனையின் விசேட மருத்துவர்கள் குழுவினரின் அறிக்கையை பெற்றுக்கொள்ளுமாறும் நீதவான், சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு பணிப்புரை விடுத்தார்.

அவரது, உடல்நிலை குறித்து ஆராயும் பொருட்;டு வத்தளை நீதவான் நேற்று மருத்துவமனைக்கு சென்ற நிலையில், கொழும்பு கோட்டை நீதிவான் முன்னிலையில் அவரை பிரசன்னப்படுத்த உத்தரவிட்டிருந்தார்.

கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கடற்படையின் முன்னாள் ஊடக பேச்சாளர் டி கே பி தஸநாயக்க நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment