ஜோன்ஸ்டனுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு ஆகஸ்ட் 25 இல்

334 0

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கு தொடர்பான தீர்ப்பொன்று எதிர்வரும் ஆகஸ்ட் மதம் 25 ஆம் திகதி வழங்கப்படவுள்ளது.

குறித்த வழக்கின் குற்றச்சாட்டு திருத்தம் தொடர்பான தீர்ப்பே அன்றைய தினம் வழங்கப்படவுள்ளது.

கூட்டுறவு மொத்த வியாபார கூட்டுத்தாபனத்தின் 153 ஊழியர்களை உத்தியோகபூர்வ பணிக்கு புறம்பான வேலைகளுக்கு பயன்படுத்தி மேலதிக நேர கொடுப்பனவு செலுத்தியமை தொடர்பிலேயே இவருக்கெதிராக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment