புதையல் அகழ்வில் ஈடுபட்ட 7 பேர் கைது

318 0

படல்கும்புர – ஏக்கர் 15 பிரதேசத்தில் புதையல் அகழ்வில் ஈடுபட்டிருந்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு இவர்கள் கைது செய்யப்பட்டதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

சந்தேகநபர்களிடம் இருந்து இரண்டு பாரவூர்திகளும் மற்றும் சிற்றூர்ந்து ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கம்பளை, கட்டுகஸ்தோட்டை, குருநாகல் மற்றும் பிங்கிரிய பிரதேசங்களை சேர்ந்த இவர்கள், மொனராகலை நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

Leave a comment