வெவ்வேறு கோணங்களில் தீவிரவாத செயற்பாடுகள்- ரணில்

326 0
ஆயுதங்களுடன் போராடிய தீவிரவாதம் தோற்கடிக்கப்பட்டாலும் வெவ்வேறு கோணங்களில் தீவிரவாத செயற்பாடுகள் இன்னும் இடம்பெறுவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
வலய ஒத்துழைப்பு தொடர்பான தெற்காசிய உள்ளக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர்களின் 8 ஆவது வருடாந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஆயுத முரண்பாடு முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
எனினும், தீவிரவாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது என்பது அதன் அர்த்தம் இல்லை.
தீவிரவாதம் வெவ்வேறு வடிவங்களில் செயற்படுகின்றதை தாம் அடையாளம் கண்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
தனித்தனியாக குறிப்பாக இணையத்தளங்கள் ஊடாக தீவிரவாதம் இயங்குகின்றது.
இதுபோன்ற புதிய தீவிரவாத செயற்பாடுகளுக்கு முகங்கொடுக்கவேண்டியுள்ளதாக என பிரதமர் தெரிவித்துள்ளார்.

Leave a comment