வடமாகாண பொலீசார் அதிகாரிகளை சந்திக்கிறார் வடக்கு முதல்வர்

656 0

வடக்கு மாகாண முதலமைச்சர் சி. வி விக்கேஸ்வரனுக்கும் வடமாகாண பிரதி பொலீஸ்மா அதிபர் தலைமையிலான பொலீஸ் அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுவருகின்றது.

இச்சந்திப்பில் வடக்கு மாகாண பிரதி பொலீஸ் மா அதிபர் ரொசாண் பெர்ணாண்டோ மற்றும் யாழ் மாவட்ட பிரதிபொலீஸ் மா அதிபர் பாலித பெர்ணாண்டோ மற்றும் யாழ் மாவட்டத்தை சேர்ந்த அனைத்து பொலீஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் இச்சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர்.

கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண முதல்வரின் அலுவலகத்தில் ஆரம்பமாகி நடைபெறும் இச்சந்திப்பில் அண்மையில் வடமராட்சி கிழக்கில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் பின்னரான நிலைமை மற்றும் பல விடயங்கள் கலந்துரையாடப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave a comment