வரலாற்று பிரசித்தி பெற்ற ஒட்டுசுட்டான் தான் தோன்றி ஈஸ்வரர் ஆலய ஒன்பது தள இராஜ கோபுரத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று அதிகாலை சிறப்புற இடம்பெற்றது.
இன்று அதிகாலை ஆலயத்தில் விசேட பூசை வழிபாடுகளின் பின்னர் ஆலய கோபுரத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
இந்நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராஜா வடமாகாண சபை சுகாதார அமைச்சர் திரு ப சத்தியலிங்கம் வடமாகாணசபை உறுப்பினர்களான ஜி ரி லிங்கநாதன் க சிவநேசன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் ஆலய நிர்வாக உறுப்பினர்கள் பக்தர்கள் என பலர் கலந்துகொண்டு அடிக்கல்லினை நாட்டி வைத்தனர்.