தடம்புரண்ட ரயில் பெட்டிகளை அகற்ற சென்ற ரயிலும் தடம்புரண்டது

283 0

கொட்டகலையில் இன்று அதிகாலை தடம் புரண்ட ரயில் பெட்டிகளை அகற்றுவதற்காக கொழும்பிலிருந்து வந்த விசேட ரயில் நாவலப்பிட்டியில் தண்டவாளத்திலிருந்து தடம் புரண்டுள்ளது. 

நலவப்பிட்டி ரயில் நிலையத்திற்கருகிலே இன்று (13) மாலை 5 மணியளவில் தடம்புரண்டுள்ளது.

கொழும்பிலிருந்து பதுளை நோக்கி சென்ற இரவு நேர தபால் சேவை ரயில் கொட்டகலை 60 அடி பாலத்திற்கு அருகில் இன்று அதிகாலை 2 மணியளவில் தடம்புரண்ட நிலையில் மலையக ரயில் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது.இந்நிலையில் குறித்த ரயில் பெட்டிகளை அகற்றுவதற்காக கொழும்பிலிருந்து விசேட ரயிலில் அதிகாரிகள் அங்கு சென்றுள்ளனர். இவ்வாறு அதிகாரிகள் சென்ற ரயில் நாவலப்பிட்டி பிரதேசத்தில் தடம்புரண்டுள்ளதுடன்,தடம்புரண்ட ரயிலை சீரமைக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

Leave a comment