களுவாஞ்சிகுடியில் நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

418 0

IMG_0225மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேற்றாத்தீவில் நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.நேற்று இரவு 10.00மணியளவில் மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியில் தேற்றாத்தீவு கொம்புச்சந்தி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மின்சார தூணில் மோதியதன் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.இந்த விபத்தின்போது களுதாவளை,வீச்சுக்காலையை சேர்ந்த சுந்தரம் துஸ்யந்தன் என்னும் 19வயது இளைஞன் படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணையை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.குறித்த பகுதியில் இரண்டு தினங்களில் மூன்று விபத்து சம்பங்கள் இடம்பெற்றுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

IMG_0218 IMG_0219 IMG_0225 IMG_0232 IMG_0240