ஒன்றரை மாத குழந்தைக்கு நேர்ந்த சோகம்

230 0

டெங்கு நோயால் சிலாபம் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.

இவ்வாறு டெங்கு நோய் தாக்கத்தற்கு உள்ளாகி உயிரிழந்துள்ள குழந்தை சிலாபம் – தெதுருஓயா – உதாகல கிராமத்தை சேர்ந்த ஒன்றரை மாத குழந்தை என தெரியவந்துள்ளது.

இந்த குழந்தை உயிரிழந்துள்ள நிலையில் தாயுக்கும், டெங்கு நோய் ஏற்பட்டு சிலாபம் மருத்துவனையில் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவரின் உடல் நிலை கவலைக்கிடமாகவுள்ளதால் குழந்தை இறந்த தகவலும் அவருக்கு தெரியப்படுத்தப்படவில்லை.

Leave a comment