மத்திய வங்கியின் சிரேஷ்ட ஊழியர் ஒருவர் பணி இடைநீக்கம்

230 0

இலங்கை மத்திய வங்கியின் ஊழியர் சேமலாப நிதிய சிரேஷ்ட ஊழியரான சமன் குமார பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக, சட்டமா அதிபர் திணைக்களம் தெரியப்படுத்தியுள்ளது. 

மத்திய வங்கி பிணை முறி பரிமாற்றம் தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவில், இன்று, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரலால், இந்த விடயம் கூறப்பட்டுள்ளதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

சர்ச்சைக்குரிய பிணை முறி பரிமாற்றத்துடன் தொடர்புடைய பர்பெசுவல் ட்ரேஸரிஸ் நிறுவனத்தின் தேவைக்கு ஏற்ப, மேற்கொள்ளப்பட்ட பரிமாற்றம் ஒன்று தொடர்பான விவகாரம் குறித்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Leave a comment