தமிழர் விளையாட்டு விழா 2017 யேர்மனி டோட்முன்ட்

22907 0

8.7 2017 சனிக்கிழமை யேர்மனி டோட்முன்ட் நகரில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனிக் கிளையினரால் தமிழர் விளையாட்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. முதல் நிகழ்வாக தமிழீழப் போராட்டத்திலே உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களுக்கும் பொதுமக்களுக்கும் ஈகைச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டு பின்பு தமிழீழத் தேசியக் கொடி ஏற்றிவைக்கப்பட்டு அகவணக்கமும் செய்யப்பட்டது.
அதன் பின்பு விளையாட்டுக்கள் ஆரம்பமானது. உதைபந்தாட்டம,; துடுப்பாட்டம், மற்றும் மெய்வல்லுனர் போட்டிகளுடன் எங்கள் தேசிய விளையாட்டான தாச்சி மறித்தல் (கிளிக்கோடு)விளையாட்டு மிகச்சிறப்பாக நடைபெற்றது. ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் என பல பிரிவுகள் இந்த விளையாட்டில் கலந்துகொண்டு வெற்றிகளை ஈட்டினார்கள். மற்றும் சங்கீதக் கதிரை முட்டிஉடைத்தல் என பல தேசிய விளையாட்டுக்கள் கலகலப்பாகவும்,பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்ககூடியதாகவும் அமைந்தது.

Leave a comment