புலம்பெயர் தமிழர் அமைப்புக்களின் விருப்பத்திற்கு ஏற்பவே உத்தேச அரசியல் அமைப்பு உருவாக்கப்படுவதாக ஒன்றிணைந்த எதிர்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
அரசாங்கத்தினால் தேர்தல் ஒன்றை நடத்த முடியவில்லை.
அத்துடன் அரசாங்கத்தின் செயற்பாடுகள் மக்களை அதிருப்திக்கு உள்ளாகியுள்ளது.
பௌத்த பிக்குகளுடன் மோதல்கள் இடம்பெறுகின்றன.
இலங்கைக்கு சர்வதேசத்தின் ஆதரவு குறைவடைந்துள்ளது.
அத்துடன், மேற்கத்தேய நாடுகளுக்கு அரசாங்கம் அடிபணிந்து செயற்படுகின்ற நிலையில் மேற்கத்தேய நாடுகளும் புலம்பெயர் தமிழர் அமைப்புக்களும் விரும்புவதை போன்றே புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்படும் என திலும் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.