அன்னிய செலாவணி மோசடி வழக்கு: காணொலி காட்சி மூலம் சசிகலாவிடம் விசாரணை

215 0

அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலாவிடம் காணொலி காட்சி மூலம் நேற்று விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கு விசாரணையை வரும் 13-ந் தேதிக்கு தள்ளிவைத்து மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைதண்டனை பெற்று பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா மீது 4 அன்னிய செலாவணி மோசடி வழக்குகளை அமலாக்கப்பிரிவினர் பதிவு செய்தனர்.

ஜெயா டி.வி.க்கு வெளிநாட்டில் இருந்து உபகரணங்கள் இறக்குமதி செய்ததில் முறைகேடு நடந்துள்ளதாக இந்த வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.சென்னை 1-வது பொருளாதார குற்றப்பிரிவு கோர்ட்டில் இந்த வழக்குகளை மாஜிஸ்திரேட்டு ஜாகீர் உசேன் விசாரணை நடத்தி வருகிறார். ஏற்கனவே காணொலி காட்சி மூலம் (வீடியோ கான்பரன்சிங்) பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவிடம் விசாரணை நடத்தி 3 வழக்குகளில் குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டு விட்டது.

4-வது வழக்கு மாஜிஸ்திரேட்டு ஜாகீர் உசேன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது காணொலி காட்சி மூலம் சசிகலாவிடம் விசாரணை நடத்தி இந்த 4-வது வழக்கிலும் குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கு விசாரணையை வரும் 13-ந் தேதிக்கு தள்ளிவைத்து மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். அன்றைய தினம் சாட்சிகளிடம் விசாரணை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a comment