கிளிநொச்சில் கனரக வாகனங்கள் இரண்டு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது(காணொளி)

230 0

கிளிநொச்சி, கண்டாவளை  வெளிக்கண்டல் பாலத்திற்கு அருகில் நேற்று இரவு பதினொன்று முப்பது மணியளவில் இரண்டு கனரக வாகனங்கள் நேருக்குநேர் மோதுண்டதில் இருவர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த இருவரும் தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பரந்தன் பகுதியில் இருந்து புதுக்குடியிருப்பு பக்கமாக சென்றுகொண்டிருந்த டிப்பர் வாகனமும் முல்லைத்தீவிலிருந்து  பரந்தன் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த  லொறியும் வெளிக்கண்டல் பகுதியில் நேருக்கு நேர் மோதுண்டு குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

டிப்பர் வாகனத்தின் சாரதி உதவியாளரும் லொறி வாகனத்தின் சாரதியுமே குறித்த விபத்தில் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் குறித்த வாகனங்கள் இரண்டும் கடுமையாக சேதமடைந்து உள்ளமையால் வீதியில் இருந்து அகற்றப் படாமையால் இன்று அதிகாலை இரண்டு மணிவரை ஏ 32  முல்லை வீதியின் போக்குவரத்து தடைப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Leave a comment