காட்டுத்திணைக்களத்தின் அனுமதியின்றி மரம் அரிய பயன்படுத்தும் உயர்ரக தொழில்நுட்பம் நிறைந்த 95 இலட்சம் ரூபா பெறுமதியான இயந்திரம் சாவகச்சேரி கச்சாய் பகுதியில் தனியார் காணியொன்றில் மரம் அரிந்து கொண்டிருந்த வேளை காட்டுத்திணைக்கள உத்தியோகத்தர்களினாலும் விசேட அதிரடைபடையினரின் உதவியுடன் கைப்பற்றப்பட்டுள்ளது.
அத்துடன் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் நாளை சாவகச்சேரி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.