ரியோ டி ஜெனீரோவில் ஒலிம்பிக் கொடி, தீபம் ஏற்றப்பட்டது

311 0

201608060916044339_Vanderlei-de-Lima-lights-the-Olympic-cauldron_SECVPFஉலகின் மிகப்பெரிய விளையாட்டு போட்டியான 31-வது ஒலிம்பிக் போட்டியின் துவக்க நாளான இன்று ரியோ டி ஜெனீரோவில் ஒலிம்பிக் கொடி மற்றும் தீபம் ஏற்றி வைக்கப்பட்டது.

உலகின் மிகப்பெரிய விளையாட்டு போட்டியான 31-வது ஒலிம்பிக் போட்டியின் துவக்க நாளான இன்று ரியோ டி ஜெனீரோவில் ஒலிம்பிக் கொடி மற்றும் தீபம் ஏற்றி வைக்கப்பட்டது.

4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் ஒலிம்பிக் திருவிழாவின் தொடக்க விழா பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரின் மரக்கானா திடலில் இன்று நடைபெற்றது.

தென்அமெரிக்காவில் அரங்கேறும் முதல் ஒலிம்பிக்கான இதில் கலாசாரத்தை பிரதிபலிக்கும் பல்வேறு உணர்வு பூர்வமான கலை நிகழ்ச்சிகள், அதிரடி நடனங்கள், சாகசங்கள் மற்றும் லேஸர் ஷோ, வண்ணமயமான வாணவேடிக்கை ஆகியவை நடைபெற்றன.