சிங்களத் தாய்மார் அதிகளவு பிள்ளைகளைப் பெற்றால் மட்டுமே நாட்டைக் காக்கமுடியும் – இசுறு தேசப்பிரிய!

220 0

சிங்களத் தாய்மாரை 5 அல்லது 6 பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு மேல்மாகாண முதலமைச்சர் இசுறு தேசப்பிரிய கோரிக்கைவிடுத்துள்ளார்.

நுகேகொடைஇ அம்புல்தெனியவில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், சிங்களத் தாய்மார்கள் அதிகளவு பிள்ளைகளைப் பெற்றால் மாத்திரமே நாட்டையும், இனத்தையும், மதத்தையும் பாதுகாக்கமுடியும்.

எமது சிங்களத் தாய்மார் சிறிய குடும்பம் தங்கம் என நினைத்து இரண்டு பிள்ளைகளைப் பெறுகின்றனர்.

தாம் பிள்ளைகளைப் பெற்று வளர்க்காது முஸ்லிம் தாய்மார்களைத் திட்டுகின்றனர். முஸ்லிம் தாய்மார் 5 அல்லது 6 பிள்ளைகளைப் பெறுகின்றனர்.

சிங்களத் தாய்மாரும் 5 அல்லது 6 பிள்ளைகளைப் பெற்று வளர்க்கமுடியும். முடிந்தளவு சிங்கள இனத்தைவிஸ்தரிக்குமாறு நான் சிங்களத் தாய்மாரிடம் கேட்டுக்கொள்கின்றேன்.

அவ்வாறு செய்தால் மட்டுமே எமது இனத்தையும், நாட்டையும், பௌத்தத்தையும் பாதுகாக்கமுடியும் எனத் தெரிவித்துள்ளார்.

Leave a comment