லோக்சபாவில் மீண்டும் கச்சத்தீவு கோரிக்கை

364 0

anthony_fest_2-600x428இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்கவேண்டும் என்று நேற்று இந்திய லோக்சபாவில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் உறுப்பினர் கே என் ராமசந்திரன் இந்தக்கோரிக்கையை விடுத்தார்.
கேள்வி நேரத்தின் போது உரையாற்றிய அவர், தமிழக மீனவர்கள் தொடர்ந்தும் இலங்கை கடற்படையினரால் சித்திரவதைகளுக்கு உள்ளாகிவருகின்றனர் என்று குற்றம் சுமத்தினார்.
எனவே இதற்கு நிரந்தர தீர்வைக் காணவேண்டுமானால்,  இந்திய கச்சத்தீவை திரும்பப்பெறவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதிலிளித்த இந்திய நாடாளுமன்ற விடயத்துறை அமைச்சர், அனந்த்குமார், இந்த கேள்விக்கு எதிர்வரும் திங்கட்கிழமை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ் பதிலளிப்பார் என்று குறிப்பிட்டார்.