ஆனந்த சமரசேகரவின் அனுமதிப் பத்திரம் இரத்து

308 0

கொழும்பின் முன்னாள் பிரதம சட்ட வைத்திய அதிகாரி, ஆனந்த சமரசேகரவின் பதிவை ஆறு மாதங்களுக்கு இரத்துச் செய்ய இலங்கை வைத்திய சபை தீர்மானித்துள்ளது. 

இதற்கமைய, அவரது வைத்திய அனுமதிப் பத்திரம் ஆறு மாதங்களுக்கு தடை செய்யப்படுவதாக, வைத்திய சபையின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

மறைந்த றகர் விளையாட்டு வீரராக இருந்த வசிம் தாஜூடினின் உடற்பாகங்கள் மாயமான சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டமை குறித்தே ஆனந்த சமரசேகரவுக்கு எதிராக இவ்வாறானதொரு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

வசிம் தாஜூடினின் உடற்பாகங்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பில் கொழும்பு நீதவான் நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு அமைய, இலங்கை வைத்திய சபையால் விஷேட விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஐந்து குற்றச்சாட்டுக்களின் கீழ் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதோடு, அவற்றில் மூன்றில் ஆனந்த சமரசேகர குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ளதாக, தெரியவந்துள்ளது.

Leave a comment