புதிய தேர்தல் முறைமையின் கீழ் உள்ளுராட்சி சபைத் தேர்தலை எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் நடாத்துவதற்கு அரசாங்கம் தயாராகிவருவதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் அறிவித்துள்ளார்.
இவ்வாறு நடாத்துவதற்கு சகல கட்சிகளும் உடன்பட்டிருப்பதாகவும், இதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் 95 வீதம் நிறைவடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த தேர்தல் தொடர்பில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் பல சுற்று கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்