தமிழரசு இளைஞரணி செயலாளராக வலி.வடக்கு சுகிர்தன்

229 0

இலங்கை தமிழரசுக்கட்சியினை சுமந்திரனின் கீழ் கொண்டுவரும் அடுத்த கட்டநடவடிக்கை ஆரம்பிக்க்கபட்டுள்ளது.இதுவரை தமிழரசுக்கட்சியின் இளைஞரணி தலைவராக வாழ்நாள் இளைஞரான மாவை சேனாதிராசாவே உள்ளார்.

செயலாளராக இருந்த வி.எஸ்.சிவகரன் மீது ஒழுக்காற்று நடவடிக்கைக்கு கோரப்பட்டுள்ள நிலையினில் அவரால் அரசியலுக்கு கொண்டுவரப்பட்ட சந்திரலிங்கம் சுகிர்தன் அப்பணிகளை ஆற்றிவந்திருந்தார்.

இந்நிலையினில் முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பாக எழுந்த சர்ச்சைகளினால் சந்திரலிங்கம் சுகிர்தன் தற்போது ஒதுங்கிசெல்ல தொடங்கியுள்ளார்.சுமந்திரன் ஆதரவு அணியினை சேர்ந்தவரென அடையாளப்படுத்தப்பட்ட இவர் நம்பிக்கையில்லா தீர்மானத்தால் ஆதரவாளர்களது கடுமையான எதிர்ப்பினாலும் கட்சி தலைமை துரோகத்தனம் செய்து தங்களை கருவேப்பிலையாக்கிவிட்டதாகவும் அவர் குற்றச்சாட்டுக்களினை முன்வைத்துள்ளார்.
அத்துடன் மார்ட்டின் வீதி பக்கம் தனது நடமாட்டத்தை மட்டுப்படுத்தவும் அவர் தொடங்கியுள்ளார்.சுமந்திரனின் புதிய கிறீன்கிராஸ் கூட்டங்களையும் அவர் தவிர்த்துவருகின்றார்.இதனையடுத்து சந்திரலிங்கம் சுகிர்தன் மீது நம்பிக்கையிழந்துவரும் சுமந்திரன் புதிய தரப்புக்களிடம் இளைஞரணியை கையளிக்க முற்பட்டுள்ளார்.

இந்நிலையினில் அவ்வாறு புதிய இளைஞரணி செயலாளரை நியமிக்க இன்று அவசர கூட்டமொன்று கூட்டப்பட்டுள்ளது. வடமாகாணசபை தொடர்பாக அண்மையில் எழுந்த சர்ச்சைகள் தொடர்பாக தமிழ் அரசுக் கட்சியின் இளைஞர் அணி உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கும் வகையிலான சிறப்புக் கலந்துரையாடல் அதுவென சொல்லப்பட்டுள்ளது. யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டம் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராசா தலமையில் நடைபெற்றுள்ளது.இந்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் ஈ.சரவணபவன் மற்றும் மாகாணசபை அவை தலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் தமிழரசு கட்சி மாகாணசபை உறுப்பினர்கள் பலர் பங்கெடுத்திருந்தனர்

இன்றைய கூட்டபிரகாரம் மாவை.சேனாதிராசாவின் தனிப்பட்ட செயலாளராகவும் முன்னாள் வலி.வடக்கு பிரதேச சபையின் தலைவராக இருந்தவருமான சோமசுந்தரம் சுகிர்தன் இளைஞரணி செயலாளராக நியமிகக்கப்படவுள்ளார்.

இவரே சுன்னாகம் நிலத்தடி நீரில் கழிவு ஓயில் கலந்தமை தொடர்பான விபரங்களை மறைக்க பலமில்லியன் இலஞ்சத்தை நொதேர்ண் பவர் நிறுவனத்திடமிருந்து பெற்றுக்கொண்டதாக அண்மையினில் அம்பலப்படுத்தப்பட்டவரென்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment