வடக்கு கிழக்கு இணைப்பு தற்போது சாத்தியப்படாது – சுந்திரன் எம் பி தெரிவிப்பு

235 0
வடக்கு கிழக்கு இணைப்பு தற்போது சாத்தியப்படாது என பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளருமான
எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
அமைச்சர் மனோ கனேசன் வடக்கு கிழக்கு இணைப்பு என்பது சாத்திப்படாத விடயம் என கருத்துக்குளை முன்னைப்பது தொடர்பில் இன்றைய  தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் ஊடகவியலாளர் சந்திப்பில், ஊடகவியலாளர்கள் கேட்ட  கேள்விக்கு பதிலலிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.வடக்கு கிழக்கு இணைப்பு தற்போது சாத்தியப்படாது எனினும் வடக்கு கிழக்கு இணைக்கப்பட வேண்டும் என்ற கூட்டமைப்பின் நிலைப்பாடு  எழுத்தில் அச்சிடப்பட்டு இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக வழிநடத்தல் குழுவில் அங்கம் வகிக்கும் ஈபி.டி.பி கட்சியின் டக்ளஸ் தேவானந்த மற்றும் மனோ கணேசன் போன்றோர் வடக்கு கிழக்கு
இணைப்பை வலியுறுத்தவில்லை எனவும் தமிழ் தேசியக் கூட்மைப்பின் உறுப்பினர்கள் மட்டுமே வடக்கு கிழக்கு இணைப்பை வலியுறுத்திவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.வடக்கு கிழக்கு இணைக்க வேண்டுமாயின் கிழக்கில் வாழும் முஸ்லிம்களின் ஒத்துழைப்பு இல்லாது இணைக்க முடியாது என குறிப்பிட்ட சுமந்திரன் முஸ்லிம் கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை ஏற்படுத்தி நடாத்திவருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களுடன் இணைந்து மாகாணசபைகளில் கூட்டாட்சி நடாத்திவருவதாகவும் தமக்கு 11 ஆசனங்களும்
முஸ்லிம்களுக்கு 7 ஆசனங்கள் இருந்தும் தாம் கிழக்கு மாகாண முதலமைச்சராக முஸ்லிம் ஒருவரையே நியமித்தனையும் இதன்போது  நினைவுபடுத்தினார்.எனவே தற்போதுள்ள கிழக்கு மாகாண முதலமைச்சர் வடக்கு கிழக்கு இணைப்பிற்கு சாதகமான கருத்துக்களையே முன்வைத்து வருவதாக
தெரிவித்த சுமந்திரன் தற்போது வடக்கு கிழக்கு இணைப்பு சாத்தியமாகாவிட்டாலும் எதிர்காலத்தில் அதற்கான சாத்தியம் அதிகமாக  உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
எனினும் சிலர் இதனை குழப்பும் முகமாக வெளியில் இருந்து மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்படுவதாகவும்
தெரிவித்தார்.இருப்பினும் புதிதாக அமையவுள்ள அரசியில் யாப்பானது தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வான ஒன்றாகவே அமையவுள்ளதாகவும்
எனவே தான் தாம் ஆட்சி மாற்றத்திற்கு ஒத்துழைத்து நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்கி அரசாங்காத்திற்கு ஆதரவும் வழங்கி வருவதாக  பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

Leave a comment