முன்னாள் போராளிக்காக மேன்முறையீடு

222 0

மொனராகலை மேல் நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ள முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் ஒருவருக்கு மேன்முறையீடு செய்வதற்கான நடவடிக்கைகளை கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் மேற்கொண்டுள்ளார். 

வெல்லாவெளியைச் சேர்ந்த சுந்தரலிங்கம் கேதீஸ்வரன் என்பவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினராக செயற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவருக்கு கடந்த 15 .06 .2017 அன்று மொனறாகலை உயர் நீதிமன்றத்தில் மூன்று பொலிஸாரை சுட்டுக்கொன்றார் என குற்றம்சாட்டி ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

இதற்கு 14 நாட்களுக்குள் மேன்முறையீடு செய்ய வேண்டும். அந்த அடிப்படையில் நேற்று மொனறாகலை உயர் நீதிமன்ற பதிவாளரை சந்தித்து மேன்முறையீட்டுக்குரிய ஆவணங்களை கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கருணாகரம் கையளித்துள்ளார்.

இவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட போது மேன்முறையீடு செய்ய உதவுமாறு குறித்த விடுதலைப்புலி உறுப்பினர் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் இதுவரையில் அதற்காக யாரும் உதவ முன்வராத நிலையில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் அதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளார்.

Leave a comment