அரசியல் கைதிகளின் விடுதலை கட்டங் கட்டமாக இடம்பெறும் – சம்பந்தன்

390 0

sampanthan-1அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் கட்டம் கட்டமாக இடம்பெற்று வருவதாக, எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது ஒரு தொடர்ச்சியான செயற்பாடு.

அனைத்து அரசியல் கைதிகளும் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது இந்த சட்டத்தை மாற்றீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

எனவே பயங்கரவாத தடை சட்டம் நீக்கப்பட்டதன் பின்னர் அவர்களை தொடர்ந்து தடுத்து வைத்திருக்க முடியாது.

இதன் அடிப்படையில்  அவர்களை விடுவிக்க அரசாங்கத்தை கோரி வருகிறோம் என்ற இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.