அம்பகஸ்வெவ பிரதேசத்தில் ஏற்பட்ட வாகன விபத்தில் இருவர் பலி

270 0

ஹபரணை – பொலன்னறுவை வீதியில் அம்பகஸ்வெவ பிரதேசத்தில் ஏற்பட்ட வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

பொலன்னறுவையில் இருந்து தம்புள்ளை நோக்கி பயணித்த உந்துருளி, தம்புள்ளையில் இருந்து ஹபரணை நோக்கி பயணித்த வேனுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

தொம்பே பிரதேசத்தைச் சேர்ந்த 26 மற்றும் 42 வயதுடைய இருவரே இந்த விபத்தில் உயிரிழந்ததாக, காவற்றுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

விபத்தில் படுகாயமடைந்த சாரதி, ஹபரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை
காவற்றுறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a comment