மாலபே நெவில் பெர்ணான்டோ மருத்துவமனையை அரசுடமையாக்க நேற்று அமைச்சரவை அனுமதி வழங்கியது.
எனினும் அந்த மருத்துவமனையை அரசுடமையாக்குவது இந்த நெருக்கடி நிலைக்கான உரிய தீர்வு இல்லை என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே அந்த சங்கம் இதனைக் குறிப்பிட்டுள்ளது.
ஜனாதிபதியுடன் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலுக்கு பின்னர் ஜனாதிபதியின் செயலாளர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதுக்கு அமைய பிரச்சினை தொடர்பில் மீண்டும் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பம் வழங்காவிடின் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அந்த சங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது.