போதைப்பொருள் பாவனைக்கு எதிராக யாழில் பேரணி

251 0

சர்வதேச போதைப்பொருள் பாவனைக்கு எதிர்ப்பு தெரிவித்து வடபுல நல்லொழுக்க சம்மேளனத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 10 மணியளவில் யாழ். பிரதான பேருந்து நிலையத்திற்கு முன்பாக இந்த பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள், சிறுவர்கள், பெண்கள், என பலரும் இந்த பேரணியில் கலந்துகொண்டுள்ளனர். தொடர்ந்து குறித்த பேரணியானது யாழ். வீரசிங்கம் மண்டபம் வரையில் செல்லவுள்ளது.

இதன் போது போதைப்பொருள் பாவனை தொடர்பில் கருத்தரங்கு ஒன்று இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a comment