முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி நகரின் மத்தியில் அமைக்கப்பட்ட மாவீரன் பண்டாரவன்னியனின் சிலை சில விசமிகளால் உடைக்கப்பட்டுள்ளது.
குறித்த சிலையானது அண்மைக்காலத்திலேயே நிறுவப்பட்டுள்ளதுடன், நிறுவப்பட்டு சில வாரங்களிலேயே அதன் ஒரு மற்றும் வாள் என்பன உடைத்தெறியப்பட்டுள்ளன.
குறித்த சிலை நிறுவும்போதே மாவீரன் பண்டாரவன்னியனின் தோற்றத்தில் இல்லையென பல சர்ச்சைகள் உருவாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்து.
இந்நிலையில், வாளேந்திய கை அற்ற நிலையில் குறித்த சிலுவையானது தொடர்ச்சியாக இருப்பது மாவீரன் பண்டாரவன்னியனை இழிவுபடுத்தும் செயல் எனவும் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
குறித்த சிலையானது வன்னி மாவட்டநாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகனால் நிறுவப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.