வெளிவிவகார அமைச்சின் கீழ் தேசிய லொத்தர் சபை கொண்டு வரப்பட்டமை சட்டவிரோதமானது-ஜே.வி.பி

230 0

வெளிவிவகார அமைச்சின் கீழ் தேசிய லொத்தர் சபை கொண்டு வரப்பட்டமை சட்டவிரோதமானது என ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றில் நேற்று தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

லொத்தர் சபை சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டே, லொத்தர் சபையை வெளிவிவகார அமைச்சின் கீழ் கொண்டு வர வேண்டும்.அவ்வாறு செய்யாது வெளிவிவகார அமைச்சின் கீழ் லொத்தர் சபையை கொண்டு வருவது சட்டவிரோதமானது.

இதன் அடிப்படையில் வெளிவிவகார அமைச்சின் கீழ் லொத்தர் சபை தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட முடியாது.இந்த விடயத்தை திருத்தி அமைப்பதா இல்லையா என்பது குறித்து பிரதமர் அல்லது ஜனாதிபதி நாடாளுமன்றில் தெளிவுபடுத்த வேண்டுமென அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

Leave a comment