அரியத்துக்கு அமைச்சுவேண்டாம் – முதலமைச்சரை மன்றாடும் சிறீதரன்!

224 0

வடக்கு மாகாணசபை அமைச்சர்கள் விவகாரம் பரபரப்பாகி ஓய்ந்த நிலையிலும் தற்போது கிளிநொச்சி மாவட்ட மாகாணசபை உறுப்பினர் அரியரட்ணம் அவர்களுக்கு கல்வி அமைச்சு வழங்கப்படக்கூடாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் முதலமைச்சர் சி.வி.விக்ஸேன்வரனுக்கு எழுதிய கடிதம் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

வடக்கு மாகாண விவசாய மற்றும் கல்வி அமைச்சுக்கள் பதவி விலகிய நிலையில் கல்வி அமைச்சுக்குப் பொருத்தமாக முன்னாள் கிளிநொச்சி மாவட்ட கல்விப்பணிப்பாளரும் மாகாணசபை உறுப்பினருமான அரியரட்ணம் அதற்குப் பொருத்தமானவர்கள் என்று பரவலாக பேசப்பட்டிருந்தது.

இந்த நிலையில் புதிய கல்வி அமைச்சரை கிளிநொச்சிக்கு வழங்கவேண்டாம் என மீண்டும் வலியுறுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு கடிதம் அனுப்பியிருக்கின்றார்.அந்தக் கடிதம் தற்போது வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றது.

Leave a comment