ஆப்கானிஸ்தான் ஹெல்மன்ட் பிராந்தியத்தில் குண்டு தாக்குதல் – 29 பேர் பலி

356 0

ஆப்கானிஸ்தான் ஹெல்மன்ட் பிராந்தியத்திலுள்ள வங்கி ஒன்றுக்கு முன்பாக இடம்பெற்ற கார் குண்டு தாக்குதலில் 29 பேர் பலியாகினர்.

சம்பவத்தில் 60க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதாக ஆப்கானிஸ்தான் அரசாங்க பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த கார் குண்டு தாக்குதல் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

பலியான மற்றும் காயமடைந்தவர்களில் அதிகளவானோர் பொது மக்கள் மற்றும் பாதுகாப்பு தரப்பை சார்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்தவித அமைப்பும் உரிமை கோரவில்லை.

Leave a comment