சம்பந்தன் எழுத்து மூலம் அறிவிக்கவில்லை

271 0

வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மேற்கொண்டுள்ள தீர்மானம் குறித்து இதுவரை எழுத்து மூலம் தெரியப்படுத்தப்படவில்லை என, ஆளுநர் ரெஜினோல் குரே குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து சம்பந்தன் தொலைபேசியில் தெரியப்படுத்தியுள்ள போதிலும், எழுத்து மூலம் இதுவரை அறிவிக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஷ்வரனுக்கு எதிராக அண்மையில் 21 மாகாண சபை உறுப்பினர்கள் கையெழுத்திட்டு நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது.

எதுஎவ்வாறு இருப்பினும், மேற்கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகளுக்கு அமைய, நம்பிக்கையில்லாப் பிரேணையை நீக்க சம்பந்தன் தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Leave a comment