இலங்கையூடாக 21 இந்தியர்கள் ஐ எஸ்ஸில் இணைவு

324 0

29-1422538766-02-isisகேரள மாநிலத்தைச் சேர்ந்த 21 பேரை இலங்கை ஊடாக சிரியாவுக்கு அனுப்பி ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் இணைத்ததாக சந்தேகிக்கப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்திய தேசிய புலனாய்வாளர்கலால் அவர் கைது செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கேரளாவைச் சேர்ந்த இந்துப் பெண்கள் உள்ளிட்ட சிலரை முஸ்லிம் மதத்துக்கு மாற்றி, மொத்தமாக 21 பேர் இவ்வாறு இலங்கை ஊடாக சிரியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

எவ்வாறாயினும், கேரளாவைச் சேர்ந்தவர்கள் இலங்கை ஊடாக சிரியா சென்றமைக்கான ஆதாரங்கள் இல்லை என்று இலங்கை காவற்துறையினர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.