மன்னார் மர்மக் கிணற்றின் தடயப்பொருட்கள் ஆய்வுக்கு

464 0

625.117.560.350.160.300.053.800.210.160.90-5மன்னார் – திருக்கேதீஸ்வரம் – மாந்தையில் உள்ள மர்மக் கிணற்றில் இருந்து அகழப்பட்ட மண் மற்றும் தடயப்பொருட்கள் இன்று ஆய்வுக்கு உட்படுத்தப்படவுள்ளன.

கடந்த மூன்று தினங்களாக இந்த கிணறு தோண்டப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.

இதில் இருந்து எலும்பு துண்டுகள், எலும்பு ஓடு, நாணயம், முட்கம்பிகள் மற்றும் துப்பாக்கி ரவை உள்ளிட்ட பல தடயப்பொருட்கள் மீட்கப்பட்டிருந்தன.

இந்த பொருட்கள் குறித்த பகுப்பாய்வு அறிக்கை மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் முன்வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

வழக்கு விசாரணை மீண்டும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 5ஆம் திகதி மீண்டும் இடம்பெறவுள்ளது.