விண்வெளியில் புதிதாக உருவாகும் நாடு: 5 லட்சம் பேர் குடியேற விண்ணப்பம்

235 0

விண்வெளியில் உருவாகும் புதிய நாட்டில் குடியேற 5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் 2 லட்சம் பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு புதிதாக உருவாகும் விண்வெளி நாட்டில் குடியேற அனுமதி சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது.

ரஷியாவைச் சேர்ந்த கம்ப்யூட்டர் விஞ்ஞானியும், ஏரோஸ்பேஷ் இன்டர்நே‌ஷனல் ஆய்வு மைய தலைவருமான டாக்டர் இகோர் அசுர்பெய்லி விண்வெளியில் ஒரு நாட்டை உருவாக்க திட்டமிட்டுள்ளார். அதற்கு ‘அஸ்கார்சியா’ என பெயரிடப்பட்டுள்ளன.

விண்வெளியில் உருவாகும் புதிய நாடு குறித்த அறிவிப்பை கடந்த ஆண்டு அக்டோபர் 12-ந்தேதி பாரீசில் அறிவித்தார். அதில் குடியேற விரும்புபவர்கள் விண்ணப்பம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.

அதை தொடர்ந்து சர்வதேச அளவில் 200 நாடுகளை சேர்ந்த 5 லட்சம் பேர் விண்ணப்பம் செய்தனர். அறிவிப்பு வெளியிட்ட 20 நாளில் இவ்வளவு பேர் மனு செய்து இருந்தனர்.

அவர்களில் 2 லட்சம் பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு புதிதாக உருவாகும் விண்வெளி நாட்டில் குடியேற அனுமதி சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் விண்வெளி நாடு உருவாக்க கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டு விழா வருகிற செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது. அதற்கான அடிக்கல் அகார்சியா-1 என்ற மைக்ரோ செயற்கை கோள் மூலம் வருகிற செப்டம்பரில் அனுப்பப்பட உள்ளது. அது ஒரு ரொட்டி போன்ற அமைப்பில் 20 செ.மீ. நீளம் இருக்கும். 2.3 கிலோ எடை இருக்கும்.‘விண்வெளி நாட்டில் மக்கள் குடியேறும் முதல் படியாக அஸ்கார்சியா-1 விண்கலம் செயல்படும்’ என டாக்டர் அசுர்பெய்லி தெரிவித்துள்ளார்.

Leave a comment