இலங்கையில் யாரும் எங்கும் கோவில்கள் அமைக்க தடையில்லை – வடக்கு ஆளுநர் (காணொளி)

397 0

நாவற்குழியில் சட்ட விரோத மாக அமைக்கப்பட்டு வரும் பௌத்த விகாரை தொடர்பாக வடக்கு ஆளுநரிடம் ஊடகவியலாளர்கள் கேட்க கேள்விக்கு பதிலளிக்கும் போது ஆளுநர் குரே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தென்பகுதியில் எத்தனை கோவில்கள் கட்டப்படுகின்றன யாரும் தடை போடுரார்களா இல்லையா தென்பகுதியில் கோவில் அமைக்கப்படமுடியுமானால் ஏன் வடக்கில் அமைக்கமுடியாது. இது ஒரு நாடு எல்லா இடத்திலும் ஒரே சட்டம் தானே உள்ளது யாழ்ப்பாணம் வேறு நாடா இல்லையே என தெரிவித்த ஆளுநர் தெற்கில் ஞானசேர தேரோ இனவாதம் பேசுகிறார் என்றால் வடக்கில் சிவாஜிலிங்கம் இனவாதம் பேசுகிறார்.இதில் ஒன்றுமில்லை இவர்களால் ஒன்றுமே செய்யமுடியாது எல்லாம் வாய் கதை மட்டும் என தெரிவித்தார் ஆளுநர்.