அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இஸ்ரேல் உதவி

294 0
அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இஸ்ரேல் அரசாங்கம் உதவியளித்துள்ளது.நேற்று மாலை வெளிவிவகார அமைச்சின் வளாகத்தில் குறித்த நிவாரணம் வழங்கப்பட்டதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இந்தியாவால் வழங்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் அடங்கிய மூன்றாவது கப்பல் நேற்று மாலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

இதன்போது இந்திய உயர்ஸ்தானிகர் தரங்சித் சிங்கினால் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு அந்த நிவாரணம் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, பாகிஸ்தானின் நிவாரணம் அடங்கிய கப்பல் நேற்று மாலை இலங்கை வந்தடைந்தது.