சிறீலங்காவில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக இதுவரையில் 44 பாடசாலை மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தினை கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் 15 மாவட்டங்களில் உள்ள 202 பேர் உயிரிழந்துள்ளதுடன், 96 பேர் காணாமல் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.