கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை

241 0

காலி – மாகொல்ல கச்சவத்த விகாரைக்கு அருகில் நேற்று மாலை நபரொருவர் இளம்  பெண்ணொருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கிய நிலையில், பெண் உயிரிழந்துள்ளார்.

பின்னர் குறித்த நபர் தன்னை தானே காயமேற்படுத்திக் கொண்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

கவலைக்கிடமான நிலையில் இருவரும் கராபிடிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலே குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கொலைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை