பெண்ணொருவர் தூக்கிட்டு தற்கொலை

247 0

பொலன்னறுவை – அளுத்வெவ பிரதேசத்தில் பெண்ணொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளவர் 39 வயதான பெண்ணொருவர் என காவற்துறை தெரிவித்துள்ளது.

இரண்டு பிள்ளைகளின் தாயான குறித்த பெண்,தனது வீட்டின் அறையொன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பொலன்னறுவை நீதவானால் நீதவான் விசாரணைகள் இடம்பெறவுள்ள நிலையில்,சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலன்னறுவை காவற்துறை முன்னெடுத்துள்ளது.