அமெரிக்கா: விமானநிலையத்தில் கையில் துப்பாக்கியுடன் பயணிகளை அலறவிட்ட மர்மநபர்

252 0

அமெரிக்காவின் ஓர்லண்டோ சர்வதேச விமானநிலையத்தில் கையில் துப்பாக்கியை வைத்து பயணிகளிடன் பீதியை ஏற்படுத்திய மர்மநபரை போலீசார் கைது செய்தனர். இதனால், சிறிது நேரத்திற்கு விமான நிலையம் மூடப்பட்டது.

அமெரிக்காவின் ஓர்லாண்டோ மாநிலத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் நேற்றிரவு கையில் துப்பாக்கியுடன் மர்மநபர் ஒருவர்
நுழைந்துள்ளார். இதனைக்கண்ட பொதுமக்கள் அலறி அடித்துக்கொண்டு ஓட ஆரம்பித்தனர். இதனையடுத்து, அங்கிருந்த போலீசார் மர்மநபரை சுற்றி வளைத்தனர்.
இருப்பினும் அந்த நபர் துப்பாக்கியை கீழே போடாமல் தொடர்ந்து அங்கு மறைந்துள்ளார். இந்த காட்சிகளை சில பயணிகள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்ய ஆரம்பித்தனர். இதனால், விமான நிலையத்திற்கு வெளியே அதிகம் பேர் கூட ஆரம்பித்தனர். இப்படியாக சுமார் 2 மணி நேரமாக அங்கு குழப்பமான சூழ்நிலையே நீடித்தது.
விமான நிலையத்தை தற்காலிகமாக மூடிய போலீசார், ஒரு வழியாக துப்பாக்கி வைத்திருந்த நபரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். மேலும், அந்நபரால் யாருக்கும் காயமில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். சில நாட்களுக்கு முன்னர் மிஸ்ஸிஸிப்பி மாநிலத்தில் இதே போல் துப்பாக்கியை கொண்டு வந்த மர்மநபர் கன்மூடித்தனமாக சுட்டதில் 8 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.