திருகோணமலை – மூதூர் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பெருவெளி கிராமத்து ஆரம்ப பாடசாலை மாணவிகள் மூவர், இரு இளைஞர்களினால் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டதாக ஏற்பட்ட குழப்பநிலையை தொடர்ந்து அவ்விரு இளைஞர்களும், அக்கிராம மக்களினால் தாக்குதல்களுக்கு உள்ளாகி சிறைபிடிக்கப்பட்டு, பின்பு மூதூர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
மாணவிகள் மூவரும் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டுள்ளனர்.
குற்றவாளிகளை கடுமையான தண்டனைகளுக்கு உட்படுத்தக் கோரியும், பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரியும், கிளிவெட்டி மஹா வித்தியாலய மாணவர்கள்,பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்களும் இணைந்து இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

