ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான தொடர்ச்சியான விசாரணைகளின் பகுதியாக கைது செய்யப்பட்ட அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே 90 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முன்னெடுத்துள்ள விசாரணைகளுக்கு ஆதரவாக இந்த தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் மூலம் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான மேலதிக தகவல்கள் சேகரிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்படவுள்ளதாக பாதுகாப்பு தரப்புகள் குறிப்பிட்டுள்ளன.

