ரஷ்ய ஆதரவாளரான உக்ரைன் அரசியல்வாதி ஒருவர் கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் ஒருவர் ஜேர்மனியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் ஜேர்மனியில் கைது
ரஷ்ய ஆதரவாளரும், உக்ரைன் நாட்டின் முன்னாள் ஜனாதிபதியான விக்டர் யானுக்கோவிச் என்பவரின் உதவியாளருமான ஆண்ட்ரி (Andrii Portnov, 51) என்பவர், 2025ஆம் ஆண்டு, ஸ்பெயின் தலைநகரான மாட்ரிட் நகரில் கொல்லப்பட்டார்.
இந்நிலையில், ஆண்ட்ரியைக் கொன்றவர் என சந்தேகிக்கப்படும் ஒருவரை ஜேர்மன் அதிகாரிகளும், ஸ்பெயின் அதிகாரிகளும் ஜேர்மன் நகரமான ஹெயின்ஸ்பெர்கில் கைது செய்துள்ளார்கள்.
உக்ரைன் நாட்டின் நான்காவது ஜனாதிபதியான விக்டர், 2014ஆம் ஆண்டு நடைபெற்ற உக்ரைன் புரட்சியின்போது பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டார்.
அதைத்தொடர்ந்து விக்டர் ரஷ்யாவில் தலைமறைவாக வாழ்ந்துவருவதாக கூறப்படுகிறது.
அதேபோல, விக்டரின் உதவியாளரான ஆண்ட்ரியும் 2014ஆம் ஆண்டு உக்ரைனை விட்டு வெளியேறி ரஷ்யாவுக்குச் சென்றுவிட்டார்.
இந்நிலையில், 2025ஆம் ஆண்டு, மே மாதம் 21ஆம் திகதி, ஸ்பெயினிலுள்ள Pozuelo de Alarcón என்னுமிடத்தில், ஆண்ட்ரி கார் ஒன்றில் ஏற முயன்றபோது, மர்ம நபர் ஒருவர் அவரை நோக்கி சரமாரியாக சுட்டதில் ஆண்ட்ரி உயிரிழந்தார்.
ஸ்பெயிலுள்ள அந்த பள்ளியில், ஆண்ட்ரியின் பிள்ளைகளில் ஒருவர் படித்துவந்ததாக கூறப்படுகிறது. அவர் எப்போது ரஷ்யாவிலிருந்து ஸ்பெயினுக்கு வந்தார் என்பது தெரியவில்லை.

