இம்ரான் கானுக்கு சிகிச்சை அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

12 0

சிறையில் உள்ள பாகிஸ்​தான் முன்​னாள் பிரதமர் இம்ரான் கானின் (73) வலது கண் பார்வை பாதிக்கப்​பட்டுள்தால் சிகிச்சை அளிக்க உச்ச நீதி​மன்​றம் உத்தரவிட்டு உள்​ளது.

பாகிஸ்​தான் கிரிக்​கெட் அணி​யின் முன்​னாள் கேப்​டன் இம்​ரான் கான், தெஹ்ரீக் இ–இன்​சாப் (பிடிஐ) கட்​சி​யைத் தொடங்​கி, 2018 பொதுத் தேர்​தலில் வென்​று, பாகிஸ்தானின் 22-வது பிரதம​ராகப் பதவி​யேற்​றார். கூட்டணிக் கட்​சிகள் வில​கிய​தால், 2022 ஏப்​ரல் மாதம் அவர் பிரதமர் பதவி​யில் இருந்து வில​கி​னார்.

பின்​னர் அவர் மீது ஊழல், மோசடி, கொலை மிரட்​டல் என 100-க்​கும் மேற்​பட்ட வழக்​கு​கள் பதிவு செய்​யப்​பட்​டன. சில வழக்​கு​களில் அவருக்கு சிறை தண்​டனை விதிக்கப்பட்டுள்​ளது. தற்​போது அவர் ராவல்​பிண்​டி​யில் உள்ள அடிலா சிறை​யில் அடைக்​கப்​பட்டு உள்​ளார்.

இந்த சூழலில் இம்​ரான் கானின் வலது கண்​ணில் சிஆர்​விஓ என்ற நோய் பாதிப்பு ஏற்​பட்டு உள்​ளது. இதன் ​காரணமாக வலது கண்​ணில் 85 சதவீத பார்வை இழப்பு ஏற்​பட்​டிருப்​ப​தாகக் கூறப்​படு​கிறது. சிறை அதி​காரி​கள் அவருக்கு உரிய சிகிச்சை அளிக்​க​வில்லை என்று குடும்பத்​தினர் குற்​றம் சாட்​டு​கின்​றனர்.

இதுதொடர்​பாக பாகிஸ்​தான் உச்ச நீதி​மன்​றத்​தில் முறையிடப்​பட்​டது. இந்த வழக்கை தலைமை நீதிபதி யஹ்யா அப்​ரிடி, நீதிபதி ஷாகித் பிலால் ஹுசைன் அமர்வு விசா​ரித்து நேற்று முக்​கிய உத்​தர​வைப் பிறப்​பித்​தது. “இம்ரான் கானின் கண் பார்​வையை பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்க சிறப்பு மருத்​து​வர் குழுவை அமைக்க வேண்​டும்.

பிப்​ர​வரி 16-ம் தேதிக்​குள் அவருக்கு பரிசோதனை செய்து முழு​மை​யான அறிக்​கையை நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்ய வேண்​டும். அவர் தனது பிள்​ளை​கள் மற்​றும் உறவினர்​களிடம் பேச தொலைபேசி வசதியை சிறை நிர்வாகம் செய்து கொடுக்க வேண்​டும்” என்று தலைமை நீதிபதி அமர்வு உத்​தர​விட்​டது. பாகிஸ்​தான் அரசு வட்டாரங்​கள் கூறும்​போது, “உச்ச நீதி​மன்​ற உத்​தர​வின் அடிப்​படை​யில்​ செயல்​படு​வோம்​” என்​று தெரிவித்​தன.