எல்லாப் புகையிலைப் பொருள்களுக்கும் இன்றுமுதல் 20% வரி உயர்கிறது.2026 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் அது அறிவிக்கப்பட்டது.
சிங்கப்பூரில் தயாரிக்கப்படும் புகையிலைப் பொருள்களுக்கும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதியாகும் புகையிலைப் பொருள்களுக்கும் வரி உயர்வு பொருந்தும்.
இனி ஒரு சிகரெட்டின் விலை சுமார் 10 காசு உயரும். சுருட்டுக்கும் அதே கதிதான்.
புகையற்ற புகையிலைப் பொருள்கள்: 1 கிலோவின் விலை 378 வெள்ளியிலிருந்து 454 வெள்ளியாக அதிகரிக்கும்.
2018இல் புகையிலைப் பொருள்களுக்கான வரி 10 சதவீதம் உயர்ந்தது. பின்பு 2023இல் அது 15 சதவீதமான அதிகரித்தது.
புகைபிடிக்கும் பழக்கத்தைத் தடுக்க இது உதவும் என்று அரசாங்கம் நம்புகிறது.

