யாழ் ஊடகவியலாளர்களுக்கு செயலமர்வு

254 0
யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் “தமிழ் கார்டியன்” ஊடக நிறுவனம் நடாத்தும் ஊடகத் துறையில் தடைகளை விலக்கல் என்ற தொனிப் பொருளிலான கலந்தாய்வு இன்று காலை யாழ்ப்பாணம் ரில்கோ விருந்தினர் விடுதியில் ஆரம்பமாகியது.
யாழ். ஊடக அமையத்தின் தலைவர் ரி.சபேஸ்வரன் தலைமையில் நிகழ்வு ஆரம்பமாகியது.  தமிழ்கார்டியன் சார்பில் அதன் பிரதம ஆசிரியர் அபிநயா நாதன், முன்னாள் ஆசிரியர்கள் சுதர்சன் சுகுமார் மற்றும் துஷ்யன் ஆகியோர் வளவாளர்களாகக் கலந்து கொண்டனர்.
ஊடகவியலாளர்கள், யாழ். பல்கலைக்கழக ஊடகத்துறை மாணவர்கள் என பலர் இந்தக் கலந்தாய்வில் கலந்து கொண்டனர். போருக்குப் பின்னரான காலப்பகுதியில் தமிழ் ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் தடைகள் பற்றியும் அவற்றை எதிர்கொள்ளும் வழிமுறைகள் பற்றியும் ஆராயப்பட்டதுடன், சமூக வலைத்தளங்களின் பாவனை பற்றியும் விளக்கமளிக்கப்பட்டது.