ஒன்றிணைந்த நாட்டுக்குள் சமஸ்டி முறையில் தீர்வை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்-சீ.வி.விக்னேஸ்வரன்

244 0
ஒன்றிணைந்த நாட்டுக்குள் சமஸ்டி முறையில் தீர்வை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
ஆழிக்குமரன் ஆனந்தனின் நினைவாக, வல்வெட்டித்துறையில் நீச்சல் தடாகம் ஒன்றை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா புதிய நிதி அமைச்சர் மங்கள சமரவீர தலைமையில் நேற்று இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் உரையாற்றிய முதலமைச்சர் விக்னேஸ்வரன், இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, மாகாண சபைக்கும், மத்திய அரசாங்கத்துக்கும் இடையில் பரஸ்பர புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொள்வதற்கு, நேரடியான தகவல் பரிமாற்றங்கள் இருக்க வேண்டும்.
தற்போது பத்திரிகைகள் வெளியிடும் செய்திகளின் ஊடாக ஒருவரை ஒருவர் அறிந்துக் கொள்ளப்படுவதும், புரிந்துக் கொள்வதுமே முரண்பாடுகளுக்கான காரணம் என்று வட மாகாண முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.