டில்வின் சில்வா தலைமையில் புதுடெல்லிக்கு விஜயம்

13 0

இந்திய கலாச்சார உறவுகள் கவுன்சிலின் (ICCR) அழைப்பின் பேரில், மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தலைமையிலான ஒரு குழு, வியாழக்கிழமை (05)  காலை இந்தியாவின் புதுடெல்லிக்கு புறப்பட்டது.

புதுடெல்லியைத் தவிர, அவர்கள் குஜராத் மற்றும் கேரளாவிற்குச் செல்ல உள்ளனர், அங்கு அவர்கள் இந்த மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் கலந்துரையாடுவார்கள். இந்தியாவின் விவசாயம், தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு தொடர்பான மையங்களையும் அவர்கள் பார்வையிடுவார்கள். பாராளுமன்ற உறுப்பினர்களான கருணநாதன் இளங்குமரன் மற்றும் கிட்ணன் செல்வராஜ் ஆகியோரும் இந்தப் பயணத்தில் இணைந்துள்ளனர்.